Thursday, November 25, 2010
பழுத்துதிர்ந்த இலையொன்றின்…
இறுதி சொட்டு ஈரத்தை
பருகி கனத்த பூமி
தனது கருப்பையில் நிறைத்தது இன்னொரு தலைமுறைக்காக…
யாருமற்ற வெளியில்…
விழுந்துருண்ட கையடக்க காற்றினை
உள்ளிழுத்து வேர் முடிச்சுகளில் தாங்கியது.
பூமி பற்றி மேலெழ தவித்த செடி…
ஈரம் பருகி…
காற்றருந்தி உயிர்க்க தொடங்கிய ஒன்று
sநிலம் பிளந்து…
துள்ளி வெளியேறிய அச்சிறு தருணத்தில்
குருதி பாய்ந்து…சிதிலமாகி கிடந்த
சதைக்குவியல்களில்
ஒரு இனமழித்த களிப்பில் வீற்றிருந்தது கழுகொன்று.
இவையெல்லாம் போக…
அங்கொன்றும், இங்கொன்றுமாய்
இறைந்து கிடந்த துப்பாக்கி குண்டுகளைக் கொண்டு
பளிங்கு விளையாட துவங்கியிருந்தது.
கை, கால் முளைத்த அச்சிற்றுயிர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment