ஜன்னல் வழி உள்நுழைந்து...சினேகமாய் முனகி
சிறகசைத்து உறவாடிய சாம்பல் நிறக்குருவி
கிளைப்பரப்பி துளிர்விட்ட பெருநேச காலத்தில் சாத்தியமானது
எனக்கு குருவியும்,குருவிக்கு நானும்....
அடைமழை நின்று போன துயர்மிகு காலமது
சரிந்துப்போனது கூடு
இடிந்துக்கிடக்கிறது வீடு
போக்கிடமின்றியே நீள்கிறது இருவரது பயணமும்...