Sunday, August 8, 2010

காற்று...நீ...காமம்

பச்சையமிழந்து  வாழ்வழிந்த
இலைகளில் கால்பதித்து  நடை பழகியது காற்று
அதன் முதுகிலேறி, பறக்க நீள்கிறது வெந்நிற நேசம்
காணப்பொறுக்காது நீ வீசியெழுகிறாய்...
அழுகிய நாற்றம் பீடித்த நல்ல கெட்ட வார்த்தைகளை
உனதிருத்தல் தாண்டி தூரச்சென்றதன் விழிகள்
வியாபித்து படர்கிறது வெளியெங்கும்
மேலுயர்ந்த உந்தன் பார்வைகள்
தடுமாறி வீழ்கிறது குழந்தைகளின்
பசி நிறைக்கும் முலைகளிடத்து...
தொடையிடுக்கில் கைகள் பதித்து’
கழிவிரக்கமடைகிறது உன் காமம்
சுருண்டு அடங்குகினாய்...சிறு பரப்புக்குள்
வெற்றிக்கொண்டதென்னவோ...பிறிதிரண்டும்தான்

No comments: